தெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

தெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பெங்களூரு:தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை எழுந்தது. .

இந்த கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய போது 4 பேரும் தப்பி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனை தடுக்க முயன்ற காவல் முறையினரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.