கர்நாடகாவில் மண் சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. மண் சரிவின்போது அங்கிருந்த வீடு மற்றும் தேநீர் கடையின் உள்ளே இருந்த சுமார் 12 பேர் மண்ணில் புதைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.