டாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி

டாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வீடு இல்லாதால் வறுமை காரணமாக அவர் அரசு கட்டி கொடுத்த டாய்லெட்டில் 3 வருடமாக வசித்து வந்த ஒரு சோகதகவல் வெளியாகி உள்ளது.மயூர்பஞ்ச் மாவட்டம் கன்னிகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் திரெளபதி பகேரா . 72 வயதான இவரும் இவரது மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். ஆதரவு யாரும் இல்லாததால் அவருக்கு வீடு இல்லை. இதனால் இங்கு அரசு தரப்பில் கட்டப்பட்டிருந்த மிக குறுகிய அளவில் உள்ள டாய்லெட்டில் தனது உடமைகளை வைத்து வசிக்க துவங்கினார். மேலும் இந்த அறையிலேயே சமையல் செய்வதும், இரவு அங்கேயே தூங்குவதுமாக வாழ்க்கை கழித்து வருகிறார்.இரவு நேரத்தில் மகளும், பேரனும் டாய்லெட் வெளியே தூங்கி கொள்கின்றனர்.இந்த தகவல் வெளியானதும் கிராம அதிகாரிகளிடம் கேட்டபோது, தங்களிடம் வீடு வழங்கும் அதிகாரம் இல்லை. அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வீடு ஒதுக்க மேல் அதிகாரிகளிடம் முறையிடுவோம் என்றனர்.