கலைஞர் தொலைக்காட்சியில் பரபரப்பாக பேசப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ நிகழ்ச்சி

கலைஞர் தொலைக்காட்சியில்  பரபரப்பாக பேசப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ நிகழ்ச்சி

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்க, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி 25 அத்தியாயங்களை கடந்து பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வர உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 :00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.