ராஜாவுக்கு செக் திரை விமர்சனம்
நடிகர்கள்:சேரன்,இர்ஃபான்,ஸ்ருஷ்டி டாங்கே
இயக்கம்:சாய் ராஜ்குமார்
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், இர்ஃபான், சிருஷ்டி டாங்கே, சாராயூ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. ஜனவரி 24-ம் தேதி வெளியான இந்தப் படத்தை சோமன் மற்றும் தாமஸ் இணைந்து தயாரித்திருந்தார்கள். எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) க்ளெய்ன் லெவின் சின்ட்ரோம் என்கிற வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.
மகள் மேல்படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல தயாராகுகிறார். வெளிநாட்டிற்கு செல்லும் முன்பு 10 நாட்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குகிறார் சேரன். மறுநாள் வெளிநாட்டிற்கு கிளம்ப உள்ள நிலையில் மகள் கடத்தப்படுகிறார்.
கடத்தல்காரர்கள் சேரன் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி சூழலை உருவாக்க அதையும் தாண்டி அவர் தன் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.அப்பா, மகள் பாசக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் பெரிதாக ஈர்க்கவில்லை. சேரனின் நடிப்பு அருமையோ அருமை.ஸ்ருஷ்டி டாங்கே சிறிது நேரமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். இர்பான் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படியே தொடர்ந்தால் வில்லனாக ஒரு பெரிய ரவுண்டு வரலாம்.
வினோத் எஜமானியா இசையில் அப்பா மகள் பாடல் இன்னும் அழுத்தமாய் மனதில் இடம் பிடித்திருக்கலாம் .பின்னணி இசையில் ஓரளவிற்கு சமாளிக்கிறார் .
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தங்கள் மகள்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றும் களவாணிகள் இடம் இருந்து எப்பிடியாவுது காக்க வேண்டும் என்ற பாடத்தை சொல்லுகிறது இந்த ராஜாவுக்கு செக் .