கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்!

சமூகத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களை மையமாக்கி எடுத்து வெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'.

ஒரு சாதாரண மனிதன் எடுக்கும் விஸ்வரூபத்தை கதையாகக் கொண்ட படம் 'கடுகு'.

இப்படங்களை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படங்கள் பேசப்பட்டன.

அக்கதைகளின் ஆழத்தை அறிந்த பலரும் பாராட்டினார்கள்.

 தமிழில் தனக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுள்ள விஜய்மில்டன் இப்போது கன்னடத் திரை உலகத்திற்குள் நுழைகிறார்.

 இவர் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். 

சமீபத்தில் சிவராஜ்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “டகரு” ( Tagaru ) . இதில் வில்லனாக நடித்து மக்களிடம் பரபரப்பாக பேசபட்டவர் டாலி தனஞ்ஜெயா. இந்த இருவரும் மீண்டும் சேர்ந்து எப்பொழுது நடிப்பார்கள் என்ற எதிபார்ப்பு மக்களிடம் அதிகமாக இருந்தது. அதனால், இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க பல பேர் முயர்ச்சித்தார்கள்.டைரக்டர் விஜய்மில்டன் சொன்ன கதை பிடித்து போக மீண்டும் சிவராஜ்குமார் - டாலி தனஞ்ஜெயா ( dolly dhananjeya ) இப்படம் மூலம் ஒன்றாக இணைகிறார்கள். இதை கேள்விபட்ட கன்னட திரை உலகில் இப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படத்தைத் தமிழில் 'கோலிசோடா' , கடுகு' போன்ற படங்களைத் டைரக்ட் செய்த விஜய்மில்டனின் - ரஃப் நோட் ( rough note ) தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனம் முதன் முறையாக கன்னடத்தில் , கிருஷ்ண சர்தக்கின் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. 

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி .விஜய்மில்டன். இசை ஜெ.அனூப் சீலின்.

இதன் அறிவிப்பை, சிவராஜ்குமார் பிறந்த நாளான இன்று ஜூலை 12 நடிகர் சூரியா வெளியிட்டார்.