பிரதாப் போத்தன் எச்சரிக்கை

பிரதாப் போத்தன் எச்சரிக்கை

பிரதாப் போத்தனின் குரலில் அவரது சகோதரிக்கு நடிகர் ஒருவர் செல் போனில் பேசி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதுபோல் பல தடவை இருமி விட்டு போனை துண்டித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது என் தங்கை இத்தாலியிருந்து கொரோனா பரவுவதற்கு முன்பே இந்தியா திரும்பி தற்போது கேரளாவில் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் சினிமாவில் தோல்வி அடைந்த நடிகர் ஒருவர் எனது சகோதரியை போனில் எனது குரலில் மிமிக்ரி செய்து பிரதாப் பேசுகிறேன் என்று தொடர்ந்து இருமிக் கொண்டே இணைப்பை துண்டித்துள்ளார் எனது சகோதரி பதறி போய் விட்டார் அந்த நடிகர் யார் என்பது தெரிந்து விட்டது அவர் இப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதாப் போத்தன் கூறியுள்ளார்.