சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் நிலச்சரிவு: தொழிலாளர்களை மீட்க தீவிர நடவடிக்கை
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கல்லடி பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அங்கு பணியாற்றி வந்த சுரங்க பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மண்ணுக்குள் சிக்கியள்ளதாகவும் அவர்களை மீட்க 300க்கும் அதிகமான தேசிய பேரிடர் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.