வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘ஆடாத ஆட்டமெல்லாம்’

வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘ஆடாத ஆட்டமெல்லாம்’

வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘ஆடாத ஆட்டமெல்லாம்’. திறமை வாய்ந்த புதிய நடன கலைஞர்களை உருவாக்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்..  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களது நடனத்தின் மூலமாக மக்களை மகிழ்விக்க செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.. எந்த தலைமுறையினரும் எல்லா வயதினரும் தங்களது நடன திறமையை வெளிப்படுத்துவதற்கு தளம் அமைத்துக் கொடுப்பதாக இந்த நிகழ்ச்சி உருவாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் திறமையை மதிப்பெண் கொடுத்து அளவிடுவதற்கு என எந்த ஒரு சிறப்பு நடுவர்களும் அல்லது சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.. இதில் பங்குபெறும் போட்டியாளர்களே தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்தி முன்னுக்கு வரும் ஒரு நிகழ்ச்சி என்கிற வகையில் இதை வித்தியாசமான ஒரு புதிய முயற்சி என்று சொன்னால் அது மிகையல்ல.