கலைஞர் தொலைக்காட்சியில் நெஞ்சுக்கு நீதி ஒளிபரப்பாகிறது

 கலைஞர் தொலைக்காட்சியில் நெஞ்சுக்கு நீதி ஒளிபரப்பாகிறது

முத்தமிழறிஞர் கலைஞர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ‘’நெஞ்சுக்கு நீதி’’என்ற தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதியிருக்கிறார். அதை ஒலி - ஒளி வடிவில் காட்சிப்புத்தகமாக “கலைஞர் தொலைக்காட்சியில்” ஒளிபரப்பாகிறது .

நெஞ்சுக்கு நீதியில் அவரது வாழ்க்கை மட்டுமின்றி, இந்தியாவின் நெடிய வரலாறும் இடம்பெற்றிருக்கும். கலைஞரின் அரிதான காட்சிகள், பேச்சுகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி அழகும் நேர்த்தியும் மிக்கதாய் ‘’நெஞ்சுக்கு நீதி - தமிழ்த் தலைவனின் கதை’’ என்கிற நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.