கலைஞர் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான தொடர் "நாகினி"
கலைஞர் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான தொடர் "நாகினி"
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "நாகினி" என்கிற விறுவிறுப்பான தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நினைத்த உருவத்திற்கு மாறும் இச்சாதாரி நாகினி என்கிற பாம்பு பெண்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. பழிவாங்குதல் மற்றும் தீயோரிடமிருந்து நாகமணியை பாதுகாத்தலை மையமாகக் கொண்ட இந்த கதைக்களத்தில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
தன் தாயின் மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்க செல்லும் இச்சாதாரி பாம்புகளாக மௌனி ராய், அதா கான் நடித்திருக்கிறார்கள். பழிவாங்க சென்ற இடத்தில் காதலித்து திருமணம் செய்யும் "நாகினி", தன் தாயை கொன்றவர்களை எப்படி பழிவாங்கிறாள்? தன் எதிரிகளிடம் இருந்து நாகமணியை பாதுகாத்தாரா? என்பதை மையப்படுத்தி கதை உருவாகியிருக்கிறது.