முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை!

 முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இல்லங்கள் உட்பட அம்மாநிலத்தின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சிஎம்ஆர்எல் (CMRL) பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

தனியார் இரசாயன நிறுவனமான கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL), பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற கணினி நிறுவனத்திற்கு எவ்வித சேவைகளும் பெறாமல் சட்டவிரோதமாக ரூ.1.72 கோடி ரூபாய் பணம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி சிஎம்ஆர்எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நேற்றுதான் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது; நீதிமன்ற உத்தரவு வெளியான அடுத்த நாளே, மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியோடு பினராயி விஜயனின் வாடகை இல்லம், அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸின் இல்லம் மற்றும் சிஎம்ஆர்எல் நிறுவன அதிகாரிகளின் இடங்கள் எனப் பல இடங்களில் இந்தச் சோதனை ஒரே நேரத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.