கொரோனோ பாதிப்பில் நயன்தாரா படம்

கொரோனோ பாதிப்பில் நயன்தாரா படம்

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் "நெற்றிக்கண்". 1981 ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

கண் பார்வையற்றவராகவும், போலீஸ் அதிகாரிகயாகவும் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனோ பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதிப்பு முடிந்ததும் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.