இந்தி நடிகர் அக்ஷய்குமார் மேலும் ரூபாய் 3கோடி நிதி உதவி

இந்தி நடிகர் அக்ஷய்குமார் மேலும் ரூபாய் 3கோடி நிதி உதவி

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளனர் இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது இதனை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி வருகிறது.

இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25கோடி வழங்கினார் மும்பை மாநகராட்சிக்கும் ரூபாய் 3கோடிவழங்கி இருக்கிறார்.மருத்துவ உபகரணங்கள் முக கவசங்கள் கொரோனா பரிசோதனை,கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கி யுள்ளார்.மேலும் நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க இரவு பகலாக வேலை செய்துவரும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு அமைப்பினர்,அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.