சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பியுமான சோனியா காந்தி, சமீப ஆண்டுகளில் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், 79 வயதாகும் சோனியா காந்திக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், குருகிராமில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அந்த அறுவை சிகிச்சையின் தன்மை குறித்த கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும், ஜனவரி மாதத் தொடக்கத்தில், சுவாசக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியின் குளிர்காலச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஆகியவற்றால் ஏற்பட்ட மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின் லேசான தீவிரமே அவரது நிலைக்குக் காரணம் என்று மருத்துவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.

மாநிலங்களவைக்கு வருவதற்கு முன்பு ஐந்து முறை மக்களவை உறுப்பினராக இருந்த சோனியா காந்தி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் இரண்டு முறை காங்கிரஸ் தலைவராகவு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.