முதலமைச்சர் ஜோசப் விஜயை அவதூறாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ கைது!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்ததோடு, “உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம்; நாங்களெல்லாம் கோமாளிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சட்டமன்றத்தைப் பூட்டிப் பார், உனக்கு எலும்பு இருக்காது, உடைத்துத்தான் அனுப்பி வைப்போம்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார்.
இந்த அவதூறு மற்றும் மிரட்டல் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சரைத் தரக்குறைவாகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறி, காவல் துறையினர் தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.