இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் 100 பிரபலங்களுக்கு ஜான் அமலன் மற்றும் சினேகா நாயர் ஆகியோர் இணைந்து விருதுகள் வழங்கினர்.

இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் 100 பிரபலங்களுக்கு ஜான் அமலன் மற்றும் சினேகா நாயர் ஆகியோர் இணைந்து விருதுகள் வழங்கினர்.
இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் 100 பிரபலங்களுக்கு ஜான் அமலன் மற்றும் சினேகா நாயர் ஆகியோர் இணைந்து விருதுகள் வழங்கினர்.

இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் 100 பிரபலங்களுக்கு ஜான் அமலன் மற்றும் சினேகா நாயர் ஆகியோர் இணைந்து விருதுகள் வழங்கினர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி  கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் மிகப்பிரமாண்டமாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்,  பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப்பிரபலங்களான ராதாரவி, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு,பிஜார்ன்,ஷ்ருதிகா, அக்ஷரா ரெட்டி,மாளவிகா ஜெயராம்,ரம்யா பாண்டியன்,ரோபோ சங்கர்,செமன்,பார்வதி நாயர்,ஷிரின் காஞ்ச்வாலா,ஷிவானி ராஜசேகர்,சஞ்சிதா ஷெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சிறந்த திரைப்படத்திற்கான விருது இரவின் நிழல் படத்திற்காக  இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது புதிய தலைமுறை ஆசிரியர் கார்த்திகை செல்வன், சன் நியூஸ் மூத்த உதவி ஆசிரியர் துரைப்பாண்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதேபோன்று இந்த ஆண்டுக்கான சிறந்த மக்கள் தொடர்பு அலுவலர்(PRO) விருது பா. இந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர்களின் குரலில் பேசி ரோபோ சங்கர் நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.  நகைச்சுவை நடிகர் யோகிபாபு தர்பார் பட பாடலுக்கு நடனம்  ஆடியும், ஜிவி பிரகாஷ் நடனமாடியபடி பாடல் பாடியும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் மேடையை அலங்கரித்தனர்.

நடிகர் பார்த்திபன், நடிகர் ராதாரவி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தியன்  விருதுகள் 2022 குறித்து பேசி தங்கள் மகிழ்சசியை வெளிப்படுத்தினர்.

 நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்

அனைவரின் முன்பாக இந்தியன் அவார்ட்ஸ் விருதினைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். சுதந்திர தினத்தன்று நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசு  வழங்கிய விருதுடன் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாயை மீண்டும் 5 ஆயிரம் ரூபாயை 10 லட்சத்து உடன் இணைத்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினார் என்பதை நினைவு கூர்ந்த பார்த்திபன், இந்த நிகழ்வுக்குப் பின்பாக தன்னைப் போன்ற நடிகர்களுக்கு  இந்தச் சம்பவம் மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது என்றும்,  இது போன்று தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த விருது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும்  ஊக்கத்தினை அளிப்பதாக கூறினார். இந்தியன் விருதுகள் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்டதாக குறிப்பிட்ட பார்த்திபன், இது போன்ற விருதுகள் வழங்கும்  நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்திவரும் இந்தியன் மீடியா ஓர்க்ஸ் நிறுவனத்தை வெகுவாக பாராட்டினார்.  

 நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உரையாற்றும் போது,
 நடிகராக இருந்த தான் தனது தந்தையின் மறைவுக்கு பின்பாக தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருவதாக கூறினார்.  அரசியலாக இருந்தாலும் வியாபாரமாக இருந்தாலும் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர்,
இது போன்ற விருதுகள் வருங்காலங்களில் பல்வேறு துறை திறமைசாலிகளை கண்டறிந்து   அவர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

பின்னர் உரையாற்றிய பத்திரிகையாளர் நக்கீரன்கோபால் இந்த விருதைப்பெற 35 ஆண்டுகள் நிறைய வலிகளை தாங்கி, கஷ்டங்களை அனுபவித்ததாக கூறினார். அந்த கஷ்டங்களுக்கு மருந்தாக இந்த விருது கிடைத்துள்ளதாக தெரிவித்தார். விருது மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக  ஜான் அமலனிடம் பாராட்டு தெரிவித்த அவர், காட்சிக்கு வைக்கத்தக்க கம்பீரமான விருதாக இது இருக்கிறது என்றார். இது நக்கீரன் குடும்பத்திற்கு கிடைத்த விருது என்று குறிப்பிட்ட அவர், இந்தியன் மீடியா ஓர்க்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளதை நிகழ்ச்சி தொகுப்பாளர் வாயிலாக கேட்டு தெரிந்து கொண்ட நக்கீரன் கோபால் இந்த முயற்சிக்கு தனது மிகப்பெரிய பராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். 

நாம் ஒற்றுமையாக இணைந்திருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில் விருது உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியலுக்காக விருது வழங்கப்பட்டது இதுவே முதன்முறை என்று புகழ்ந்தார். அனைவரும் தயவு செய்து அரசியல் பேச வேண்டும் அரசியல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய சீமான், வாக்களிப்பதோடு நமது கடமை நிறைவடைவதில்லை என்றார். இந்த விருது தான் சரியான அரசியல் பாதையில் செல்வதை உறுதிப்படுத்துவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் உணர்த்துவதாகவும் அவர் கூறினார். போராடுவது என்பது பொழுதுபோக்கல்ல அவை திணிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சமூக குற்றத்திற்கு தான் உடன்பட அனைவரும் பொறுப்பேற்று தூய சமூகத்தை படைக்க பாடுபடவேண்டும் என்று தெரிவித்த சீமான், இது போன்ற விருது விழாவில் குடும்பத்தை அழைத்து வருவதே அவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் என்றார். தந்தை அரசியலில் ஈடுபடுவதை சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்தவர் தனது மனைவி என்பதால் நேரம் ஒதுக்க முடியாத நிலை தெரியும் என்றும் அதன் நீட்சியாக தான் இருப்பதை உணர்ந்து கொள்பவர் என்றும் சுவையாக எடுத்துக் கூறினார் அனைவரும் பிரமிக்கும் வகையில் இவ்விழாவை  ஜான் அமலன்  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்