ஐபிஎல் 2022 போட்டி; விசா கிடைப்பதில் தாமதம்; முதல் போட்டியில் மொயின் அலி பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அறிவிப்பு

ஐபிஎல் 2022 போட்டி; விசா கிடைப்பதில் தாமதம்; முதல் போட்டியில் மொயின் அலி பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அறிவிப்பு
ஐபிஎல் 2022 போட்டி; விசா கிடைப்பதில் தாமதம்; முதல் போட்டியில் மொயின் அலி பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அறிவிப்பு

ஐபிஎல் 2022 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி, முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது . மொயின் அலிக்கு விசா இன்னும் கிடைக்காததால்,  அவர் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுளள்து . இதனால் சென்னை அணியின் முதல் போட்டியில் மொயின் அலி  பங்கேற்கமாட்டார் என கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை தொடங்க இருக்க ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.