பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பட்டியலினத்தவர் பற்றி அவதூறான வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்களைத் திரையுலகில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார்.

 

அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு காவல்துறையில் புகார் அளித்தார்.

 

7 பிரிவுகளில் வழக்கு

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் காவல்துறையினர் மீரா மிதுன் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153 (A)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (B) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.