மாஸ்க் அணியாத 2,405 பேருக்கு ரூ12 லட்சம் அபராதம்

மாஸ்க் அணியாத 2,405 பேருக்கு ரூ12 லட்சம் அபராதம்
மாஸ்க் அணியாத 2,405 பேருக்கு ரூ12 லட்சம் அபராதம்

பொது இடங்களில் முககவசம் அணியாமல் வந்த 2,405 பேருக்கு ரூ12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தவறாமல் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டது. முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாநகராட்சியின் குழுக்களின் மூலம் கடந்த 14ம்தேதி முதல் 20ம்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத 2,405 நபர்களிடமிருந்து ரூ12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.