அயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை

அயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை

புதுடில்லி : அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் உ.பி., உயரதிகாரிகளை அழைத்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று (நவ.,08) ஆலோசனை நடத்தினார்.பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. நவ., 13 முதல் நவ.,15 க்குள் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படியும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் படியும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அயோத்தியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து உ.பி., மாநில தலைமை செயலாளர், டிஜிபி, மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை அழைத்து தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார். 

அயோத்தியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்ட-ஒழுங்கு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும் நாளில் இனிப்புக்கள் வழங்கலாம். ஆனால் கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என போலீசார் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.