இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மயாத்திரை படக்குழு !
![இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மயாத்திரை படக்குழு !](http://chennaipatrika.com/entertainment/uploads/images/image_750x_5e4f90f325dc0.jpg)
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் திரைப்படம் "மாயத்திரை"
பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக டூலெட், திரௌபதி படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் பாண்டி முனி படத்தில் நடித்து வரும் மேகாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர்கள் சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்
15 வருடங்களுக்கு முன்பு தாலி புதுசு என்று குஷ்புவை வைத்து படம் தயாரித்த காஸ்டியூமர் V .சாய் பாபு "மாயத்திரை" படத்தை தயாரிக்கிறார் .
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மாயத்திரை படக்குழுவினர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் நேற்று மௌன அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பை தொடங்கினர் .
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் - தி.சம்பத் குமார்
தயாரிப்பு - V.சாய் பாபு
இசை - S .N அருணகிரி
ஒளிப்பதிவு -இளையராஜா
கலை இயக்கம் - பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் - ராதிகா
சண்டைப்பயிற்சி - பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் - அசோக்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்