கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் "காலை கதிரவன்" நிகழ்ச்சி

காலை பொழுதில் புதிய தகவல்களை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுவர். அந்த தகவல்களை பார்வையாளர்கள் விரும்பும் வகையில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை தொகுத்து வழங்குகிறது காலை கதிரவன் நிகழ்ச்சி.
வெவ்வேறு பகுதிகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது காலை கதிரவன் நிகழ்ச்சி .உடல் நலம் மற்றும் உணவு பழக்கத்தை அக்கறையுடன் சொல்கிறது ‘நலம் நலம் அறிக’ பகுதி. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில், மக்களுக்கு விருப்பமான சுவைகளில் விருந்தளிக்கும் உணவகங்களை அறிமுகப்படுத்தும் பகுதி, #133 தலைமுறைகள் தாண்டியும் தலை நிமிர்ந்து நிற்கும் நூலான திருக்குறளை,இளம் தலைமுறையினரிடத்தில் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் தினமும் ஒரு திருக்குறளும் அதற்கான எளிய தெளிவுரையும், மற்றும் சமுக வலைதளங்கள் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் இயங்குவது கடினம். அப்படிப்பட்ட சமுக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை தொகுத்து வழங்குகிறது ‘வைரல் தளம்’ பகுதி போன்றவை இடம்பெறுகிறது .
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை சுமையா தொகுத்து வழங்குகிறார்