காஜலுக்கு வரும் 30ம் தேதி மும்பையில் டும் டும் டும்

காஜலுக்கு வரும் 30ம் தேதி மும்பையில் டும் டும் டும்
காஜலுக்கு வரும் 30ம் தேதி மும்பையில் டும் டும் டும்
காஜலுக்கு வரும் 30ம் தேதி மும்பையில் டும் டும் டும்

காஜலுக்கு வரும் 30ம் தேதி மும்பையில் டும் டும் டும்

 

தனக்கும், கவுதம் கிட்ச்லுவுக்கும் வரும் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடக்கவிருப்பதாக காஜல் அகர்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியானது. ஆனால் அதை காஜல் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் காஜலுக்கும், கவுதமுக்கும் விரைவில் மும்பையில் திருமணம் நடக்கப் போவதாக நேற்று தகவல் வெளியானது. இதற்கும் காஜல் எதுவும் சொல்ல மாட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

நான் எஸ் சொல்லிவிட்டேன். அக்டோபர் 30ம் தேதி எனக்கும், கவுதம் கிட்ச்லுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெறவிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்வார்கள். இருவரும் சேர்ந்து புது வாழ்க்கையை துவங்குவதில் த்ரில்லாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே எங்களை வாழ்த்துவீர்கள் என்பது தெரியும்.

இத்தனை ஆண்டுகளாக என் மீது அன்பு காட்டி வரும் அனைவருக்கும் நன்றி. நான் புதுப் பயணத்தை துவங்கவிருக்கும் நேரத்தில் உங்களின் ஆசியை எதிர்பார்க்கிறேன். நான் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

காஜலின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

வாழ்த்துக்கள் காஜல். என்ன, உங்களின் திருமணத்தை நேரில் பார்க்க முடியாதே என்கிற வருத்தம் தான். பரவாயில்லை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று நீங்கள் கூறியது தான் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு எப்பொழுதுமே எங்களின் ஆதரவு உண்டு.

நீங்கள் சந்தோஷமாக இருந்தால் அதுவே எங்களுக்கு போதும் என்று தெரிவித்துள்ளனர்.

அப்படி என்றால் திருமணம் முடிந்த பிறகு கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொள்வார். மேலும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் நடிப்பார்.