நவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'

நவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'

'பரியேறும் பெருமாள்' வெற்றிப்படத்தை தயாரித்த இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தனது இரண்டாவது தயாரிப்பாக ' இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

தினேஷ் - ஆனந்தி நடிப்பில், இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு - கிஷோர். கலை இயக்கம் - த.இராமலிங்கம். பட்த்தொகுப்பு - செல்வா. பாடல்கள் - உமாதேவி, தனிக்கொடி.விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான 'பரியேறும் பெருமாள்' மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இரண்டாவது தாயாரிப்பான 'குண்டு' திரைப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

"ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் 'குண்டு' திரைப்படத்தில் வடதமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலும் இணைந்திருக்கிறது. இது படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும்" என்று கூறுகிறார் இயக்குனர் அதியன் ஆதிரை