புதுச்சேரி – எழும்பூர் இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்!

புதுச்சேரி – எழும்பூர் இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்!

புதுச்சேரி – எழும்பூர் இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகல் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பதியில் இருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி வரும் பயணிகள் ரெயில் வருகிற 10, 13, 17, 20, 24, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதே தேதியில் தாம்பரத்தில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.

புதுச்சேரியில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் புதுச்சேரிக்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். அதே போல விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.