விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இந்திய விண்வெளித்துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, நாட்டின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ இன்று (ஜூலை 18) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி காலை 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

 

ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்பத் தொடக்க நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ முற்றிலும் உள்நாட்டிலேயே இந்த ராக்கெட்டை வடிவமைத்துத் தயாரித்துள்ளது. ‘மிஷன் ஆகமன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தச் சோதனைப் பயணத்தின் மூலம், முழுமையாகக் கார்பன் கலவைப் பொருட்களாலும், 3D அச்சிடப்பட்ட என்ஜின்களாலும் கட்டமைக்கப்பட்ட இந்த ஏழு அடுக்கு மாடி உயர ராக்கெட், தனது முதல் பயணத்தில் பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுப் பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகளைச் சுமந்து கொண்டு புவி சுற்றுப்பாதையை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து விண்வெளித் துறையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.