தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி
![தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி](http://chennaipatrika.com/uploads/images/image_750x_5edb946d56f62.jpg)
தமிழகத்தில் இன்று புதிதாக 3,680 பேருக்கு கரோனா வைரஸ் .இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,636. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 44 பேர்.
சென்னையில் இன்று 1,205 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 74,969 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 64 பேர் பலியாகியுள்ளனர்.இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 4,163 பேர் உள்பட இதுவரை மொத்தம் 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.