அதிர்ச்சிக்குள்ளாகிய பொதுமக்கள் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

அதிர்ச்சிக்குள்ளாகிய பொதுமக்கள் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு
அதிர்ச்சிக்குள்ளாகிய பொதுமக்கள் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

அதிர்ச்சிக்குள்ளாகிய பொதுமக்கள் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்திய குடும்பங்கள் வருடத்துக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஒரு சிலிண்டர் விலை ரூ.734 என நிர்ணயிக்கப்பட்டது. பிப்ரவரியில் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.147 அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை ஆனது. அதனைத்தொடர்ந்து சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் சிலிண்டர் விலை ரூ.610 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில் டிசம்பர் மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந்தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது. அப்போது மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.660 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. அந்தவகையில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்திருந்தது.இந்த திடீர் உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் இந்த மாதம் முடிவதற்குள் மீண்டும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் ரூ.660 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.710-க்கு விற்பனை ஆகிறது. இந்த மாதம் முடிவதற்குள்ளாகவே கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.