நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு தாருங்கள்

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு தாருங்கள்
நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு தாருங்கள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடர் தொடக்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இளம் எம்.பி.க்கள், புதிய எம்.பி.க்கள், முதல் முறை எம்.பி.க்களுக்கு கூட்டத்தொடர் விவாதத்தின் போது அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அமளி, போராட்டங்களால் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் தடைபடும்போது கற்றல் மற்றும் புரிதல் இன்மை ஏற்படுவதாக இளம் எம்.பி.க்களுக்கு என்னிடம் கூறியுள்ளனர். ஆகையால், நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவது முக்கியம். நாடாளுமன்றம் ஒத்துவைக்கப்படுவதால் பேச வாய்ப்பு கிடைக்காமல் இழப்பு ஏற்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கூறுகின்றனர். ஆகையால், எம்.பி.க்களின் வலியை எதிர்க்கட்சி தலைவர்களும், அனைத்து கட்சியினரும் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன்' என்றார்.