உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்!

உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்!

துபாய் மரினாவில் நடந்த 'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 24 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. துபாயில் வசித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஆண்டோனியோ விட்ரி என்பவர் இந்த செருப்பை வடிவமைத்து தயாரித்துள்ளார். 30 காரட் வைரங்கள் மற்றும் கடந்த 1579-ம் ஆண்டில் அர்ஜெண்டினாவில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஆகியவைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதன் குதிகால் பகுதியானது துபாயில் இருக்கும் உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 கோடியே 99 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 141 கோடியே 11 லட்சம் ரூபாய்) ஆகும்.