பீகார் மாநிலத்தில் கனமழை காரணமாக 29 பேர் உயிரிழப்பு !!

பீகார் மாநிலத்தில் கனமழை காரணமாக 29 பேர் உயிரிழப்பு !!
பீகார் மாநிலத்தில் கனமழை காரணமாக 29 பேர் உயிரிழப்பு !!
பீகார் மாநிலத்தில் கனமழை காரணமாக 29 பேர் உயிரிழப்பு !!

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் ஏற்பட்ட கனமழை காரணமாக மழை தொடர்பான விபத்துக்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.