வர்தா புயலை அடுத்து வருகிறது "மாருதா" புயல்

சென்னை: சமீபத்தில் சென்னையில் கரையை கடந்த வர்தா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த வர்தா புயலினால் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இந்திய பெருங்கடலில் தற்போது மற்றொரு புயல் ஒன்று உருவாகியுள்ளது. அதற்கு ‘மாருதா’ என இலங்கை அரசு பெயர் வைத்துள்ளது.
ஆனால் அந்த புயல் எப்போது வரும் என்றும், எந்த பகுதியில் கரையைக் கடக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.