கொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர் விகிதம் 96%-ஐ நெருங்கியது!!

கொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர் விகிதம் 96%-ஐ நெருங்கியது!!
கொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர் விகிதம் 96%-ஐ நெருங்கியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.47 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புதிதாக 22,272 பேர் பாதித்துள்ளனர்.
இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,69,118 ஆக உயர்ந்தது.
புதிதாக 251 பேர் இறந்துள்ளனர்.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,47,343  ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 22,274 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,40,108 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,81,667 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குணமடைந்தோர் விகிதம் 95.78% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.77% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 8,53,527 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 16,71,59,289 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.