பாஜக தோற்பது ஜனநாயகத்துக்கு நல்லது - திரிணாமுல் காங்கிரஸ்

பாஜக தோற்பது ஜனநாயகத்துக்கு நல்லது - திரிணாமுல் காங்கிரஸ்
பாஜக தோற்பது ஜனநாயகத்துக்கு நல்லது - திரிணாமுல் காங்கிரஸ்

பாஜக தோற்பது ஜனநாயகத்துக்கு நல்லது - திரிணாமுல் காங்கிரஸ்

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்பது ஜனநாயகத்துக்கு நல்லது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சவுகதா ராய் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகள் நான்கிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. கர்தகா, சந்திப் பூர், கொசபா, தின்ஹடா ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் தீவிரமாக உழைத்த திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறுவதில் வியப்பேதும் இல்லை என்று சவுகதா ராய் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசு மீது பொதுமக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்று சவுகதா ராய் கூறியுள்ளார்.