போராட்டத்தை வாபஸ் வாங்கிய பங்களாதேஷ் வீரர்கள்..! இந்திய தொடர் உறுதி..!

போராட்டத்தை வாபஸ் வாங்கிய பங்களாதேஷ் வீரர்கள்..! இந்திய தொடர் உறுதி..!

முதல்தர கிரிக்கெட் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என 11 கோரிக்கைகளை முன் வைத்து கடந்த திங்கட்கிழமை பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை எந்தவித சர்வேதேச போட்டிகளில் விளையாட மாட்டோம் என அறிவித்திருந்தனர்.

இதில் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் , முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இதை அறிவித்தனர்.இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணியுடன் பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருந்தன. இவர்களின் அறிவிப்பால் போட்டி நடக்குமா..? நடக்காதா..? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.

இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் தாங்கள் வைத்த கோரிக்கைகளில் இரண்டைத் தவிர மற்றதை ஏற்றுக்கொள்வதாக கூறியதால் வாபஸ் பெறுவதாக ஷாகிப் அல் ஹசன் கூறினார். முதல் தர கிரிக்கெட் வீரர்கள் சனிக்கிழமை முதல் மீண்டும் விளையாடுவார்கள் இந்திய தொடருக்கான பயிற்சியிலும் வீரர்கள் பங்கேற்பார்கள் என கூறினார்.